500 ரூபாய் சட்டை 50 ரூபாய்-புதிய ஜவுளிக் கடைக்கு  சீல் 

by Editor / 20-09-2021 07:19:45pm
500 ரூபாய் சட்டை 50 ரூபாய்-புதிய ஜவுளிக் கடைக்கு  சீல் 

 

துக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட புதிய ஜவுளிக் கடைக்கு இரண்டு மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் புதிய ஜவுளிக் கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. கடை திறப்பு விழா சலுகையாக 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு சட்டை 50 ரூபாய் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை அறிந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் புதிய துணி கடை முன்பு ஆர்வத்துடன் திரண்டனர். முன்னுரிமை அடிப்படையில் சட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாமல் திரண்டிருந்தனர். கடை நிர்வாகமும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் சூழல் உருவானது. 
இது குறித்து தகவலறிந்த விராலிமலை வட்டாட்சியர் கடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடைக்கு சீல் வைத்தார். இதனால் 50 ரூபாய்க்கு சட்டை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 

Tags :

Share via