கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்..ரயில்வே விளக்கம்

by Staff / 10-05-2024 01:49:10pm
கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம்..ரயில்வே விளக்கம்

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அபாய சங்கிலி சரியாக இயங்கியதாவும், முறையாக இழுக்காததே பிரச்னை என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via