மனசாட்சி இருந்தால் அவர்களும் ராஜினாமா செய்யட்டும் - உத்தவ் தாக்கரே

by Staff / 11-05-2023 04:22:34pm
மனசாட்சி இருந்தால் அவர்களும் ராஜினாமா செய்யட்டும் - உத்தவ் தாக்கரே

சிவசேனா வழக்கில் மாநில முதல்வர் பதவியை மீட்டெடுக்க முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்தது தவறாக இருந்தாலும், எனது முடிவு நியாயமான முறையில் இருந்தது. தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மனசாட்சி இருந்தால், என்னை போல் அவர்களும் ராஜினாமா செய்யட்டும்” என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via