தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று முதல் 3 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :