வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by Staff / 06-05-2024 01:36:08pm
வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கனமழை காரணமாக பிரேசில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த வாரத்தில் ரியோ கிராண்டே டி சுல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 101 பேரை காணவில்லை. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, இது தாங்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய பேரழிவு என அந்நாட்டு அதிபர் லுலா ட சில்வா அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via