பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய நபரை கயிறு கட்டி மீட்ட கிராம மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொடர் மழையால் தரைப்பாலம் இடித்ததில் வெள்ள நீரில் சிக்கிய நபரை கிராம மக்கள் மீட்டனர். அதிக மழை நீர் வெள்ளம் புகுந்து தரைப் பாலம் இடிந்தது அப்போது அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் அவரை கயிறு கட்டி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே கனமழை காரணமாக கடலூர் பெங்களூர் சாலைகளில் மரங்கள் விழுந்தன. கூடலூரில் சாலையில் மூங்கில் மரங்களும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Tags :