,நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் 5 பேர் கைது.

by Editor / 11-10-2022 09:27:11pm
,நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் 5 பேர் கைது.

மும்பை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளியும்,,நிழல் உலக தாதாவுமான  தாவூத் இப்ராகிம் தலைமையில் அவரது கூட்டாளிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம்பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் ஈடுபட்டு வந்த சோட்டாசகீலின் மைத்துனர் சலீம் குரோஷி மற்றும் தொழிலதிபர் ரியாஸ் பாட்டி ஆகியோரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இவர்கள் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அவர்களுடன் தொடர்புடைய மேலும் 5 பேரின் அடையாளம் தெரியவந்தது. . இதன்பேரில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற அஜய் கந்தா, பிரோஷ் சம்தா, சமீர்கான், பப்பா பட்டான், அம்ஜத் ரெட்கர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via