கருப்பான பெண் குழந்தை பெற்ற இளம்பெண்ணுக்கு அடி, உதை

by Staff / 13-10-2022 04:40:41pm
கருப்பான பெண் குழந்தை பெற்ற இளம்பெண்ணுக்கு அடி, உதை

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 29 வயதான பெண்ணுக்கு பிப்ரவரி 2019 இல் திருமணம் நடந்தது. இந்த பெண்ணும், கணவரும் மும்பையில் உள்ள கமோத்தேயில் வசித்து வருகின்றனர்.நவம்பர் 2019 இல், அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை கேலி செய்து துன்புறுத்தத் தொடங்கினர். அவர்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்றும், கருப்பு நிற குழந்தை வேண்டாம் என்றும் கூறி மனரீதியாக துன்புறுத்தி வந்தனர். உடல் ரீதியாகவும் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், பெண்ணின் புகாரை மேற்கோள் காட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் புகாரின்படி, கார் வாங்க அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் வரதட்சனை கேட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் கணவர் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். அன்று முதல் அவர்கள் பெற்றோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அந்த புகாரில், தனது கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டியதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via