டெல்லியில் போராட்டம் நடத்துவோம்- உதயநிதி அறிவிப்பு

by Staff / 15-10-2022 03:08:52pm
டெல்லியில் போராட்டம் நடத்துவோம்- உதயநிதி அறிவிப்பு

சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுவோம். மீண்டும் ஒரு மொழிப்போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம். தொடர்ந்து இந்தி திணிப்பை மேற்கொண்டால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம். முதல் கட்ட போராட்டம் இன்று நடந்துள்ளது" என்று தெரிவித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்படும்போது அவரிடம் நிருபர்கள், "டெல்லியில் போராட்டம் எப்போது நடத்தப்படும்" என்று கேட்டனர். அதற்கு அவர், "தி.மு.க. தலைவர்தான் முடிவு செய்து அறிவிப்பார்" என்று பதிலளித்தார்.

 

Tags :

Share via