வரும் 4ஆம் தேதி தென்காசி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.
அய்யா வைகுண்டசாமியின் 191வது அவதார தினத்தை முன்னிட்டு 04.03.2023 (சனிக்கிழமை)அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சியாளர் துரை.ரவிசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதேபோன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :