சொத்துக்களை இழக்க வேண்டிய நிலையில் . லாட்டரி சீட்டில் விழுந்த ரூ.70 லட்சம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வருபவர் பூக்குஞ்சு. மீனவரான இவருக்கு ஒரு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அண்மையில் வீடு கட்டுவதற்காக அருகில் உள்ள யூனியன் வங்கியில் ரூ.9 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவரால் திருப்பி கட்ட முடியவில்லை. வட்டிமேல் வட்டி அதிகமாகி, சொத்துக்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டம் எப்போதாவது நம்மை தேடி வரும் என்பார்கள் அதேபோல், ஒரு லாட்டரி சீட்டு மூலம் மொத்த கடனும் தீர்ந்துள்ளது.
கடந்த 12ம் தேதி கேரள அரசு வெளியிட்ட ரூ.70 லட்சம் பரிசு தொகை கொண்ட அட்சயா லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த சீட்டு அவருக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளது. அடுத்த நாள், அவருக்கு சொத்து முடக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பிய அதே வங்கிக்கு, தனது பரிசு தொகையை பெறுவதற்காக சென்றுள்ளார். ஏறக்குறைய ரூ.10 லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ள கடன் தொகையை அடைத்து விட பூக்குஞ்சு முடிவு செய்துள்ளார். சிறிய அளவில் தொழில் தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
Tags :