கிரேன் மோதி தம்பதி உயிரிழப்பு
ஈரோடு மூலப்பாலையம் தீரன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. ஓய்வு பெற்ற வன ஊழியரான இவர். இவரது மனைவி பாப்பாத்தி. இருவரும் துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் ஈரோடு காங்கேயம் சாலையான செட்டிப்பாலையம் பகுதிக்கு வந்து உள்ளனர்.அப்போது பின் பக்கமாக வந்த கிரேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :