ஆன்மீகத்தில் செய்யக்கூடாதது

by Editor / 20-06-2021 04:49:12pm
ஆன்மீகத்தில் செய்யக்கூடாதது

 

✡️பலவிதமான எண்ணெய்களின் கலவையைக் கொண்டு ஸ்வாமி சந்நிதியில் விளக்கேற்றக் கூடாது.
நல்லெண்ணெய், நெய் விளக்காக இருந்தாலும், தனித்தனியாகவே ஏற்றப்பட வேண்டும்.

✡️இரண்டாக உடைந்த தேங்காயை மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.. அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உடைந்திருந்தால், அதை நிவேதனம் செய்யக்கூடாது.

✡️ஏற்கனவே ஒருபடத்தின்/விக்ரஹத்தின் மீது சாற்றப்பட்ட புஷ்பத்தை, வேறு ஒரு படத்திற்கோ விக்ரஹத்திற்கோ சாற்றக்கூடாது.

✡️காய்ச்சிய பாலினால் அபிஷேகம் செய்யக் கூடாது.

✡️புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட உணவு வகைகளை நிவேதனம் செய்யக் கூடாது.(ஆவுடையார்கோவில் விலக்கு)

✡️கிணற்றிலிருந்தோ, குழாயிலிருந்தோ அபிஷேகத்துக்கான நீரைக் கொண்டு வரும்போது, இடது கையில் சுமந்துவரக் கூடாது.

✡️பொட்டலத்தோடு பாக்கு வெற்றிலைகளை நிவேதனம் செய்யக்கூடாது.

✡️நைவேத்தியத்திற்கு உபயோகிக்கின்ற பாக்கை அதன் உறையிலிருந்து வெளியே எடுத்தே நிவேதனம் செய்ய வேண்டும்.

✡️பூஜை அறையில் தெற்கு திசை நோக்கி விளக்கு எரியக் கூடாது.

✡️செயற்கை புஷ்பங்களால் இறை விக்ரஹங்களை அலங்கரிக்கக் கூடாது.

✡️அலங்கார மின்விளக்குகளால் பூஜை அறையை அழகுபடுத்தும்போது, அவை தெய்வத் திருஉருவங்களைத் தீண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

✡️தமக்காகவோ, அடுத்தவருக்காகவோ  ஆன்மீகச் சடங்குகளைச் செய்யும்போது, திருமணமானவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டே செய்ய வேண்டும்.

✡️பிளாஸ்டிக்கினால் ஆன பாய் மற்றும் ஆசனங்களில் அமர்ந்துகொண்டு ஜபம், ஹோமம் இவற்றைச் செய்யக் கூடாது.

✡️வேப்பெண்ணெய்/ வேப்பெண்ணெய் கலவையைக் கொண்டு வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கெரிக்கக் கூடாது.

✡️மாலையாகத் தொடுக்கப்பட்ட பிறகு, அவற்றிலிருந்து பூக்களைப் பிரித்தெடுத்து (பிய்த்தெடுத்து) அர்ச்சனை செய்யக் கூடாது.

✡️அர்ச்சனை செய்யப்பட்ட புஷ்பங்களை காலினால் மிதிக்கக் கூடாது..

-ஸ்ரீபாலா சமஸ்தான சத்சங்க குழு, செம்பாக்கம்.

 

Tags :

Share via