மேட்டூர் அனல் மின் நிலையஉள்ளிட்ட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

by Editor / 20-09-2023 09:28:15am
  மேட்டூர் அனல் மின் நிலையஉள்ளிட்ட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்துவரும் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை. வரி ஏய்ப்பு புகாரில், சென்னை & புறநகர் பகுதிகளில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையம் உள்ளது.இங்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் வேலைக்கு ஆட்களை  அனுப்பி வந்தது.தற்போது அனல் மின் நிலையத்தில் 850 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 7:30 மணி அளவில் வருமானவரித்துறை அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்டோர் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு வந்தனர்.பின்னர் இவர்கள் இங்கு உள்ள ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் அலுவலகத்திற்குள் சென்று  விசாரணை செய்தனர்.இந்தசோதனையினால்  மின் உற்பத்தி பாதிப்பு இல்லை என மேட்டூர் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :   மேட்டூர் அனல் மின் நிலையஉள்ளிட்ட 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.

Share via