காதலனுக்காக கடன் வாங்கி உயிரை மாய்த்த இளம்பெண்

by Staff / 20-09-2023 11:59:27am
காதலனுக்காக கடன் வாங்கி உயிரை மாய்த்த இளம்பெண்

கடனை திருப்பி செலுத்த காதலன் பணம் கொடுக்காததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் புனேவில் உள்ள விமானன் நகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த ரசிகா திவாட் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரசிகா, காதலனுக்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். மேலும், ஒரு காரும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் காதலன் இஎம்ஐ செலுத்தாததால் ரசிகா தற்கொலை செய்து கொண்டார். செவிலியராகப் பணிபுரியும் ரசிகாவின் தாயார் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஆதர்ஷ் அஜய்குமாரை கைது செய்தனர். அதே நிறுவனத்தில் பணியாற்றிய ரசிகாவும், ஆதர்ஷும் கடந்த ஜனவரி முதல் காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via