இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 25-09-2023 04:09:02pm
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் பிபி அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார் இவருடைய மனைவி ஜாஸ்மின் இவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று உள்ளது குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனம் உடைந்த ஜாஸ்மின் இரவில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீது அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது கருங்கல்பாளையம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

 

Tags :

Share via