கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை காவலர்
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார் (27) கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். கடந்த 1ம் தேதி விஷம் சாப்பிட்டு கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மயங்கி விழுந்தார் செல்வகுமார்.கடலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செல்வகுமார் இன்று காலை உயிரிழந்தார்.செல்வகுமார் 2020 ஆம் ஆண்டு பெண் ஒருவரிடம் ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி இந்த நிலையில் தற்போது வட்டியுடன் 12 லட்ச ரூபாய் கேட்பதாக அவர் ஏற்கனவே மரண வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார்.
Tags :