பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

by Staff / 23-05-2022 01:24:47pm
பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.ஹோஷியாபூர்   அருகே கியால கிராமத்தில் வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை சில தெரு நாய்கள் துரத்தியதால் எதிர்பாராதவிதமாகசணல் பையால் மூடப்பட்டிருந்த 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த உள்ளான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டான். இதனிடையே சிறுவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் சிறுவனின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via