உத்தரப்பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

by Staff / 23-05-2022 01:29:46pm
உத்தரப்பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர் .திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலை நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் வேகமாக மோதியது இந்த பயங்கர விபத்தில் காரிலிருந்து 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via