காவல்துறையின் அறிக்கைக்கு விரைவில் பதில் வழங்கப்படும்-அண்ணாமலை டுவீட்

by Editor / 29-10-2022 11:03:27pm
காவல்துறையின் அறிக்கைக்கு விரைவில் பதில் வழங்கப்படும்-அண்ணாமலை டுவீட்

தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது.
ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி  காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்,
காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்,

காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும்,

பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்


 

காவல்துறையின் அறிக்கைக்கு விரைவில் பதில் வழங்கப்படும்-அண்ணாமலை டுவீட்
 

Tags : பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

Share via