Twitter இல் உள்நுழைய முடியவில்லை
மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் இந்தியாவில் சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் உள்நுழைய முடியவில்லை என பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் உள்நுழையும்போது, 'ஏதோ தவறாகிவிட்டது, கவலைப்பட வேண்டாம் - மீண்டும் முயற்சிக்கவும்' என்று தெரிகிறது.
ட்விட்டரின் ஊழியர்கள் ஆட்குறைப்பு வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில், பல ட்விட்டர் கணக்குகள் காணாமல் போயுள்ளன. பணிநீக்கத்தின் ஒரு பகுதியாக அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கோடீஸ்வரரான எலோன் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றிய பிறகு, அவர் 50 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகக் கூறினார். நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுபவர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு குழு மேலாளர்களுக்கு மஸ்க் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :