வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு

by Staff / 07-08-2023 03:57:13pm
வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு

உத்திர பிரதேசம் மாநிலம் பாரபங்கியில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில், ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கற்களை வீசினர். இதனை அடுத்து பெட்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஆர்பிஎப் வீரர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
 

 

Tags :

Share via