முப்படைகளின் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 10,400 பெண்கள் மத்திய அரசு தகவல்

by Staff / 29-03-2022 05:18:36pm
முப்படைகளின் பாதுகாப்பு படையில் பணியாற்றும்  10,400 பெண்கள் மத்திய அரசு தகவல்

முப்படைகளிலும் சுமார் 10 ஆயிரத்து 400 பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த   பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட், நாட்டில் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக ராணுவப்படையில் ஆயிரத்து 705  பெண் அதிகாரிகள் உள்பட 6 ஆயிரத்து 589 பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.
 
இதேபோல் விமானப்படையில் ஆயிரத்து 705 பெண்களும், கப்பற் படையில் 559 பெண் அதிகாரிகளும் பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். 

 

Tags :

Share via