இலங்கையில் கனமழை- 6 பேர் பலி

by Editor / 09-11-2021 03:51:03pm
இலங்கையில் கனமழை- 6 பேர் பலி

இலங்கையில் கனமழை தொடரும் என்றும், 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. ரத்தினபுரி, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், திரிகோணமலை, பதுளைகாலி, கேகாலை, நுவரெலியா, பதுளை ஆகிய 13 மாவட்டங்கள் மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தன. வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

பதுளை, கொழும்பு, காலி, கருத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, ரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via