மூடநம்பிக்கையால் மகளை கொன்ற தாய்

by Staff / 08-11-2022 05:33:42pm
மூடநம்பிக்கையால் மகளை கொன்ற தாய்

ராஜஸ்தானில் மூட நம்பிக்கை காரணமாக பெற்ற மகளை தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. ராஜஸ்தான் கோட்டா அருகே பரன் மாவட்டத்தை சேர்ந்த ரேகா கன்வர் என்பவரது மூத்த மகனின் இதயத்தில் பிரச்சனை இருந்துவந்துள்ளது. இது குணமாக வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ரேகாவிற்கு கனவு வந்துள்ளது. இதை நிறைவேற்றுவதற்காக ரேகா 12 வயது மகள் சஞ்சனாவின் கழுத்தை டவலால் நெரித்து கொன்றிருக்கிறார்.இதுகுறித்து போலீசார் விசாரணையில் ரேகா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது கணவனையும் இதற்கு முன் கொல்ல துணிந்ததாகவும், சஞ்சனாவை கொன்றபோது 7 வயது மகன் சிங்ஹம்மையும் கொல்ல முயற்சி செய்ததாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து அவரை போலீசார் 203 சட்டப்பீரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via