முதலமைச்சர்கள் தேர்வில் இழுபறி - பாஜகவிற்கு தலைவலி

by Staff / 08-12-2023 12:57:31pm
முதலமைச்சர்கள் தேர்வில் இழுபறி - பாஜகவிற்கு தலைவலி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்த மாநிலங்களுக்கு முதலமைச்சர் பதவி யாருக்கு வழங்கபட வேண்டும் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதலமைச்சரி தேர்வில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க பாஜக மேலிடம் எண்ணுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் முன்னாள் முதலமைச்சர்களான சிவராஜ் சிங், வசுந்தரா ராஜே ஆகியோருக்கு உள்ள செல்வாக்கு பின்னாளில் ஆட்சிக்கு இடையூறு தரலாம் என்பதால் முதலமைச்சரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிப்பதாகவும் பாஜகவிற்கு இது தலைவலியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via