பூட்டிய வீட்டில் இருந்து சிறுமியை மீட்ட போலீசார்

by Staff / 19-11-2022 04:18:30pm
 பூட்டிய வீட்டில் இருந்து  சிறுமியை  மீட்ட போலீசார்

மதுரை தல்லாகுளம் திருப்பாலை அன்புநகர் பாலசுப்பிரமணிய நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அண்ணா நகர் அன்பு நகர் குருநாதன் மகன் வெற்றிச்செல்வன் என்ற வெற்றி முருகன் திருமணம் செய்துள்ளார்.அவரை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுவருவதை வழக்கமாக இருந்துள்ளது பூட்டப்பட்டு அறைக்குள் இருந்த சிறுமி அவசர போலீஸ் உதவிக்கு போன் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர்.இது தொடர்பாக வெற்றி செல்வன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via