தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தை... அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆறுதல்..

by Admin / 31-08-2021 04:22:54pm
தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தை... அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆறுதல்..


.
விழுப்புரம் அருகே மோட்டூர் கிராமத்தில் தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
 
பச்சிளம் குழந்தையை  கொடூரமாக தாக்கும் காட்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணை  கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளிநாடு வாழ் தமிழர் துறை அமைச்சருமான   செஞ்சி மஸ்தான்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அமைச்சர் மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும் என்றும்  மேலும் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேட்டி அளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் 10 ஆயிரத்தை தன் சொந்தப் பணத்தில் கொடுத்தார்.

 

Tags :

Share via