மழையில்லாததால் தீவனப்பயிர் பற்றாக்குறை  மாடுகள் விற்பனை அதிகரிப்பு. விலை கடும் வீழ்ச்சி.

by Editor / 29-10-2023 10:16:37am
மழையில்லாததால் தீவனப்பயிர் பற்றாக்குறை  மாடுகள் விற்பனை அதிகரிப்பு. விலை கடும் வீழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம்தாராபுரத்தை அடுத்த குண்டடம் மாட்டுச்சந்தைக்கு காங்கயம், தாராபுரம்,ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், காளை கன்றுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

ஈரோடு,கோவை,திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா, ஊட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். வாரம் தோறும் சுமார் 2-ஆயிரம் மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெருமளவு இறைச்சிக்கு மாடுகள் கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்கிறது. இந்தநிலையில் இப்பகுதியில் மழை பொய்த்து போனதால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். 

இதனால் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த வாரம் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.அதே நேரத்தில் வளர்ப்பு மாடுகள் மற்றும் கிடேரிகளை வாங்குவோர் எண்ணிக்கு குறைந்துள்ளது.கடந்த வாரங்களில் ரூ.40 ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30 ஆயிரம் வரையே விலை போனது. ரூ.20 ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக்கிடேரிகள் இந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாகவே விற்பனையானது.வழக்கமாக வறட்சி சீசனில் மாடுகள் விலை குறைவாகத்தான் இருக்கும். பருவமழை தொடங்கினால் விலை அதிகரிக்ககூடும்.


 

 

Tags : மழையில்லாததால் தீவனப்பயிர் பற்றாக்குறை  மாடுகள் விற்பனை அதிகரிப்பு. விலை கடும் வீழ்ச்சி.

Share via