மது விற்ற பெண் கைது

by Staff / 15-02-2023 05:39:02pm
மது விற்ற பெண் கைது

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவள்ளி (வயது 57). இவர் தனது வீட்டின் முன்பு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார். தகவல் அறிந்து தஞ்சை தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்த அம்சவள்ளியை கைது செய்தனர். மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via