காப்பகத்திலிருந்து வெளியேறிய புலி வனத்துறையினரால் மீண்டும் பிடிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து புலி ஒன்று வெளியேறி அருகிலுள்ள கிராமத்திற்க்குள் நள்ளிரவில் நுழைந்துள்ளது. கிராமத்திற்குள் புலி நுழைந்த்தகவலைத்தொடர்ந்து மக்கள் தூக்கத்தை இழந்த நிலையில் புலியை நீண்ட போராட்டத்துக்கு பின்பு வனத்துறையினர் பிடித்து கிராமத்தில் இருந்து வெளியேற்றினர். கிராமத்திற்குள் புகுந்த புலி மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் புலியை பிடித்துள்ளனர். உடல்நலம் குன்றிய அந்த புலி யாரையும் தாக்கவில்லை. வனத்துறை அதிகாரிகள் பூனையை பிடிப்பது போன்று எளிதாக அந்த புலியை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பிடித்து புலிகள் காப்பகத்தில் கொண்டுசென்று சிகிச்சை அளித்துவருகின்றனர்.
Tags : காப்பகத்திலிருந்து வெளியேறிய புலி வனத்துறையினரால் மீண்டும் பிடிக்கப்பட்டது.