திமுகவின் பண பலத்தை மனபலத்தால் எதிர்கொள்ள ஓபிஎஸ் அணி தயார்

by Staff / 03-02-2023 05:26:15pm
திமுகவின் பண பலத்தை மனபலத்தால் எதிர்கொள்ள ஓபிஎஸ் அணி தயார்

திமுகவின் பண பலத்தை மன பலத்தால் எதிர்கொள்ள அதிமுக ஓபிஎஸ் அணி தயாராக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் கட்சித் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளை இணைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலையின் முயற்சி அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதை உணர்த்துகிறது. எங்களுக்கு மட்டும் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். உண்மையில், ஓபிஎஸ் சின்னத்தைப் பெறுவதற்கான படிவங்களில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார். தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்-க்கு இரட்டை இலையை வழங்கும் என்றார்

 

Tags :

Share via