மழை நிற்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம்.

by Admin / 19-11-2021 04:06:59pm
 மழை நிற்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம்.

 மழை நிற்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம்.
 கடந்த 2 நாட்களாக சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேஷாசல வனப்பகுதியில் உள்ள கபில தீர்த்தம் அருவியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

 திருப்பதி மலைப்பாதை மற்றும் நடைபாதையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப் பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் உருவாகின. மலைப்பாதையில் 13 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

 திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் திருமலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மலைப்பாதையில் விழுந்த பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இரவு முதல் விடிய விடிய அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இன்று காலை திருமலையில் இருந்து திருப்பதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. மதியத்துக்கு மேல் திருமலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாட்களாக நடைபாதை மூடப்பட்டிருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது மழை வெள்ளம் அதிக அளவில் கரைபுரண்டு செல்வதால் மேலும் 3 நாட்களுக்கு நடைப்பாதை மூடப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் மழை நிற்கும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம். ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







 

 

Tags :

Share via