மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய மனைவி

by Staff / 14-06-2022 05:27:05pm
மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய மனைவி

விழுப்புரம் மாவட்டத்தில் மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் தினமும் மது அருந்திவிட்டு மனைவி குப்பம்மாள் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் 2 முறை அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். மீண்டும் மது போதையில் தகராறு செய்த நடராஜரின் முகத்தில் சூடான ரசத்தை உற்றியுள்ளார் வெந்து போன முகத்துடன் காவல் நிலையம் வந்த நடராஜனை போலீஸார் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via