அனுமதியின்றி  மஞ்சுவிரட்டு போட்டி-ஏராளமானோர் மீது வழக்கு..?

by Editor / 05-11-2021 09:30:24pm
அனுமதியின்றி  மஞ்சுவிரட்டு போட்டி-ஏராளமானோர் மீது வழக்கு..?

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி காலை 10.மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை,புதுக்கோட் டை, ராமநாதபுரம்,திண்டுக்கல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட காளைகள 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் 10,000ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு 63க்கு மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி தொடர்ந்து மஞ்சுவிரட்டு மாலை 3 மணிவரை நடைபெற்றும் மேலும் மாடுகள் ஏற்றிவந்த வாகனங்கள் வரிசையாக 5. கிமீ தூரம் வரை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வந்த மஞ்சுவிரட்டு போட்டியை உடனடியாக நிறுத்த காவல்துறையினர் உத்திரவிட்டனர்.மேலும் இந்த போட்டி அனுமதியின்றி  நடத்தியதாக கூறப்படுகிறது.போட்டி நடத்திய ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,


இதுவரை 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும்,ஒருவர் பலியாகி உள்ளதாகவும், கூறப்படுகிறது.

 

Tags :

Share via