வீட்டில் இறந்து கிடந்த கிராம நிர்வாக அதிகாரி

by Staff / 24-02-2023 01:24:19pm
வீட்டில் இறந்து கிடந்த கிராம நிர்வாக அதிகாரி

திண்டுக்கல் நாவலடியார் தெரு சரஸ்வதி காலனி பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் 51. திருமணம் ஆகாதவர். இவர் திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் ஆவிலிப்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். வீட்டில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியிடம் கையொப்பம் பெறுவதற்காக ஆவிலி பட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது கிராம நிர்வாக அதிகாரி மூச்சுப் பேச்சு இன்றி கிடந்துள்ளார்.இதை அறிந்த அந்த நபர் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளார். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உறவினர்கள் கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தபொழுது அவர் இறந்த நிலையில் இருந்து உள்ளார். இதனை அடுத்து அவரது உறவினர்கள் தெற்கு காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தெற்கு காவல் துறையினர் கல்யாணசுந்தரம் இறந்த நிலை அறிந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வீட்டில் தனியாக இருந்த கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் கொலையா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக வீட்டில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 

 

Tags :

Share via