கனமழை 90 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன விவசாயிகள் வேதனை.

by Editor / 03-02-2023 08:00:30am
கனமழை  90 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன விவசாயிகள் வேதனை.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக 90 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன.மாவட்ட முழுவதும் நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு லட்சம் ஏக்கர் ஏற்கனவே அறுவடை முடிந்துள்ளது.இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via