ஆசைக்கு இணங்காததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை

by Staff / 20-11-2022 02:28:45pm
ஆசைக்கு இணங்காததால்  பாலியல் வன்கொடுமை செய்து கொலை

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அம்சவல்லி. கணவரை பிரிந்த இவர், தனது 18 வயதான தன் மகளுடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

அம்சவல்லியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு ஆகியவை திருடு போயிருந்தன. காவல்துறையினர் தீவிரமாக கொலையாளியை தேடி வந்தனர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில், அம்சவல்லியுடன் உறவில் இருந்த ராஜூ என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Tags :

Share via