கஞ்சா விற்பனை - காவலர்கள் தீவிர சோதனை

by Staff / 20-11-2022 02:24:00pm
கஞ்சா விற்பனை - காவலர்கள் தீவிர சோதனை

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கலையரங்கம் பகுதியில் நின்று கொண்டிருந்த சந்தேகத்திற்கு இடமான 3 நபர்களிடம் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்ட நிலையில், அவர்களை காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவும், 1 கிலோ போதை காளானும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via