வாகன விபத்தில் மகன் கண்ணெதிரில் தந்தை பலி

by Staff / 22-11-2022 04:11:35pm
 வாகன விபத்தில் மகன் கண்ணெதிரில் தந்தை பலி

விழுப்புரம் மாவட்டம், சோழகனூரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயம் அடைந்தனா். சோழகனூா் வடக்குத் தெருவைச் சோந்தவா் வீ. மணிகண்டன் (35), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை, விழுப்புரம்-திருவண்ணாமலை சாலை, சோழகனூரில் உள்ள பள்ளி முன்பு தனது மகன் சாகித் (8)என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அமா்ந்தபடி சாலையோரம் நின்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் மணிகண்டன் மற்றும் சாகித் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினா் அவா்கள் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மணிகண்டன் உயிரிழந்தாா். சாகித் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து காணை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

Tags :

Share via