கார் வெடிப்பு விவகாரம் - 6 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Editor / 23-11-2022 07:37:51am
கார் வெடிப்பு விவகாரம் - 6 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (28) என்ற இளைஞர் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு 6 பேரும் கடந்த வாரம் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும்,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரையும் வரும் 6ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via