கனடா பிரதமர் இந்தியா மீது குற்றச்சாட்டு

by Staff / 19-09-2023 12:11:24pm
கனடா பிரதமர் இந்தியா மீது குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா குறித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலிஸ்தானி இயக்கம் மற்றும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18 அன்று வான்கூவரில் உள்ள சர்ரேயில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, கனடா தூதர் 5 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via