இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க இலங்கை முடிவு
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கை, ஒரு சேர தலைதூக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
எரிபொருள் வினியோகம் இல்லாமல் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய நேரங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தலா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாக இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.
Tags :