3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு துவங்கியது.
ஆனை மலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்க ளில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு துவங்கியது. வனவர் அல்லது வனக்காப்பாளர் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 100க்கும் மேற்பட் டோர் இப்பணியில் ஈடு பட்டுள்ளனர். முதல்நாள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதை யில் 2 கிமீ தூரம் சென்று காண்பது, 3வது நாள் ஆற்றோரங்களில் காண்பது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக் கப்படுகின்றன. உடுமலை வனச்சரகத்தில் திருமூர்த்'திமலை, குழிப்பட்டி, மாவடப்பு,வல்லக்குண்டாபுரம், கரட்டுபதி,காட்டுமலை, பொறுப்பாறு உள்ளிட்ட 12 சுற்றுகளிலும், அமராவதி வனச் சரகத்தில் அமராவதி, கோம்பு கிழக்கு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், கரட்டுபதி உள்ளிட்ட 8 சுற்றுகளிலும் கணக்கெடுப்பு நடக்கிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :