சகோதரி சாவில் மர்மம் சகோதரி புகார் எதிரொலி -உடலை தோண்டியெடுக்கும் பணி தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்த கோபி கிருஷ்ணன் மனைவி மைதீன் பீவி இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துபோனார் இவரது இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி அவரது சகோதரி பீர்பாத்திமா கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கரன்கோவில் தாசில்தார் முன்னிலையில் வீரசிகாமணியில் உள்ள கோபிகிருஷ்ணன் தோட்டத்தில் மைதீன் பீவியை புதைத்த இடத்தில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது இதனால் வீரசிகாமணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : சாவில் மர்மம்