அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

by Staff / 05-08-2023 02:16:32pm
அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது மிகவும்முக்கியம் என்று முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: திட்டங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இதுபோன்ற ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறேன். களஆய்வுக்குச் செல்லும்போது சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலை இருப்பதைக் கண்டேன். எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட அமைக்கப்பட்டுள்ள ‘டேஸ்போர்டில்’ தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பணிகளின்முன்னேற்றம் குறித்த புகைப்படங்களையும் வாரந்தோறும் பதிவேற்றம் செய்யவேண்டும். முன்னுரிமைத் திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி தமிழக மக்களுக்கு அத்திட்டங்களின் பயன்களை கொண்டுபோய்ச் சேர்த்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 

Tags :

Share via