குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை அரசு வழங்க முடியுமா மாணவியை முகம் சுளிக்க வைத்த அதிகாரி
பிகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழக தலைவரான ஹர்ஜோத் கவுர் பாம்ரா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பள்ளி மாணவிகளுடன் பாம்ரா கலந்துரையாடினார். அப்போது, ஒரு மாணவி "குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்களை அரசு வழங்க முடியுமா?" என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த பாம்ரா 'நாளைக்கே நீங்கள் எல்லாம் ஜீன்ஸ் பேண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். அதை கொடுத்தால், ஏன் அழகான ஷூக்கள் எங்களுக்கு தரக்கூடாதா? என்று கேட்பீர்கள். ஆணுறை கூட அரசுதான் தர வேண்டும் என கூறூவீர்கள்" என்று அவர் கூறிய விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
Tags :