பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் கோவை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

by Editor / 13-03-2023 11:10:28pm
 பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் கோவை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கோவையில் நேற்று (மார்ச் 12) ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via