அசாம் - மேகாலயா எல்லையில் கலவரம்

by Staff / 23-11-2022 12:22:12pm
அசாம் - மேகாலயா எல்லையில் கலவரம்

அசாம் - மேகாலயா எல்லையில் நேற்று அசாம் போலீசாருக்கும், மேகாலயா மக்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இதில் அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அசாம் வனத்துறை காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து அசாம் காவல்துறை தரப்பில், மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரக்கட்டைகளை கடத்த முயன்ற லாரி ஒன்றை தடுத்து நிறுத்தியபோது, மேகாலயா எல்லையோர கிராம மக்கள் ஆயுதங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
 

 

Tags :

Share via