கனவுக்கு பயந்து, நேரில் பாம்பிடம் கடிவாங்கிய இளைஞர்

by Staff / 25-11-2022 01:34:34pm
 கனவுக்கு பயந்து, நேரில் பாம்பிடம்  கடிவாங்கிய இளைஞர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ராஜா (54) என்பவருக்கு அடிக்கடி பாம்பு கொத்துவதுபோல கனவு வந்துள்ளது. இதையடுத்து அதுபோன்ற கனவுகள் வராமல் இருக்க பரிகாரம் செய்யும்படி அவர் ஜோதிடரை அணுகியுள்ளார். அந்த ஜோதிடர் கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் பாம்பு புற்றில் சில சடங்குகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதில் ஒரு பகுதியாக பாம்பிற்கு முன் நாக்கை நீட்ட வேண்டும் என்றும், ஜோதிடர் கூறியுள்ளார். அவரது பேச்சை கேட்ட ராஜா, புற்றில் இருந்த கண்ணாடிவிரியன் பாம்பின் முன்பு நாக்கை நீட்டியதில், பாம்பு அவரை கொத்தியுள்ளது. அப்போது ராஜா அங்கேயே மயங்கியுள்ளார்.

இதையடுத்து அவரை ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், விஷம் மேலும் பரவாமல் இருக்க அவரது நாக்கை மருத்துவர்கள் வெட்டி அகற்றினர். இதை தொடர்ந்து 4 நாட்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிர் பிழைத்தாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via